தஞ்சை மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட ராணுவ வீரரை ராணுவத்திலிருந்து நீக்க கோரிக்கை!

தஞ்சாவூர் (16 ஜன 2023): தஞ்சாவூர் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியவர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அன்சர் பள்ளிவாசலில் நேற்று அதிகாலையில் தற்சமயம் இராணுவத்தில் பணி புரியும் தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா (த/பெ ராஜேந்திரன்) என்பவர் தொழுகைக்கான அழைப்பு ஒலிவாங்கியில்…

மேலும்...

மாண்டஸ் புயல் – 251 நிவாரண மையங்கள் தயார்: தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சாவூர் (08 டிச 2022): தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை…

மேலும்...

முடிவுறும் தருவாயில் மல்லிப்பட்டினம் மனோரா சிறுவர் பூங்கா பணிகள்!

பட்டுக்கோட்டை (29 ஜூலை 2022): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா சுற்றுலா தளத்தின் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. மனோரா மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கி.பி 814ல் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் விழ்த்தியதன் நினைவாக ஆங்கியர்களின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி, நினைவு சின்னமாக கட்டியதுதான் மனோரா. சித்திலமடைந்த மனோராவில் மராமத்து பணிகள் நடைபெற்றதால் 5 வருடங்களாக…

மேலும்...

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி!

தஞ்சை (27 ஏப் 2022): தஞ்சாவூர் அருகே கோவில் தேர் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான 94 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது….

மேலும்...

தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

தஞ்சாவூர் (12 பிப் 2022): தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் 3 இஸ்லாமியர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துன் தொடர்புள்ளதாக கூறப்படும் அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், இவர், சமூக வலைத்தளங்களில் இந்துக்களை பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், இது மதமோதல்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…

மேலும்...

தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (22 ஜன 2022): தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி அருகே உள்ள…

மேலும்...

தஞ்சையில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மூடல்!

தஞ்சாவூர் (14 மார்ச் 2021): தஞ்சசை மாவட்டம் அம்மாபேட்டை பள்ளி ஒன்றில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது….

மேலும்...

நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

தஞ்சாவூர் (08 ஆக 2020): நடிகை ஜோதிகா ஏழைத் தாய்மார்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25…

மேலும்...

தஞ்சை மாவட்டம் மேலக்காவேரியில் நடைபெற்ற சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம்!

தஞ்சாவூர் (05 ஜூன் 2020): உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், மேலக்காவேரி பகுதியில் “சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம் “என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். கவிஞர் மு அய்யூப்கான் வரவேற்று பேசினார். “சுற்றுசூழல்களை நேசிப்போம் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல்காதர், மு.அப்துல்அஜீஸ் ,பயாஸ் அஹமது ,பொறியாளர்.மைதீன் பாட்ஷா உட்பட பலரும் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒட்டி மரக்கன்றுகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு உரையும், மரப்பிள்ளைகளும் நடப்பட்டன. மேலும்…

மேலும்...