முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி!

சென்னை (26 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை (ஷஹீன் பாக்) போராட்டக் களத்தில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் சீமந்தம் நடத்தி அழகு பார்த்தனர். குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரியும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சென்னை வண்ணாரப்பேடையில் பெண்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டு…

மேலும்...

வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

அறந்தாங்கி (18 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்த்து அறந்தங்கி மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்...

இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள் – கருணாஸ்!

சென்னை (18 பிப் 2020): இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், என்று நடிகர் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணரப் பேட்டை ஷஹீன் பாக் போராட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டு பேசும்போது ‘ நான் அரசியல் வாதியாகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவில்லை, ஒரு மனிதனாக உங்களுடன் நிற்கின்றேன் . இந்தியாவின் பன்முகத் தன்மை அடையாளத்தை அழிக்கும் சட்டத்தை எதிர்ப்பது நியாமான போராட்டம் என்றும், இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், வரலாறுகளை நீங்கள் மறைக்க முடியாது என்றும் கூறினார். நாளை…

மேலும்...

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றம் முற்றுகை – தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

சென்னை (17 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பிப்.19ஆம் தேதி…

மேலும்...

அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுவதா? – முதல்வருக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (17 பிப் 2020): வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் நடந்த திருமணம்!

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறியுள்ளது. இங்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு திருமணம் நடைபெற்றது. நிக்காஹ் முடிந்த நிலையில் மணமக்கள் கையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தை வைத்துக்கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் நான்காவது நாள் போராட்டம் – வீடியோ!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது. இதனை தொடர்ந்து…

மேலும்...

சென்னை ஷாஹீன் பாக் – முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை குவியும் கூட்டம் -வீடியோ!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர். மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். நாளை சட்டசபை தொடங்கும் நிலையில் சென்னை ஷாஹின் பாக் போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...