ஏர் இந்தியா விமானப் பயணத்தில் நடந்த அசிங்கம் – கண்டுகொள்ளாத விமான நிறுவனம்!

புதுடெல்லி (04 ஜன 2023): ஏர் இந்தியா பிசினஸ் கிளாஸ்-இல் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ-102 ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸ்-இல் இச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி மற்றும் சக பயணிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், சிறுநீர் கழித்தவர்…

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...

இரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன?

கோழிக்கோடு : துபையிலிருந்து கேரளாவிலுள்ள கரிப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையிலிருந்து விலகியபோது ஏற்பட்ட விபத்தில் இரு துண்டுகளாக விமானம் பிளந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர். கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுபாதை குறுகியது. இதில், விமானத்தைத் தரையிறக்குவது துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையேல் பெரும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. வந்தே பாரத் மிஷனில் இன்று இரவு 7.41 மணிக்கு துபையிலிருந்து 191 பயணிகளுடன் ஏர் இந்தியா…

மேலும்...

ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் விடுமுறை அளித்து அதிர வைத்த நிறுவனம்!

புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன்,…

மேலும்...

வந்தேபாரத் திட்டத்தில் முறைகேடு – ஏர் இந்தியா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

நியூயார்க் (23 ஜூன் 2020): வந்தேபாரத் திட்டத்தின்படி வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் ஏர்.இந்தியா விமானம் கட்டணங்கள் வசூலிப்பதை அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரமுடியாமல் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தேபாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானம் மீட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி…

மேலும்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச்…

மேலும்...

கத்தாரிலிருந்து இந்தியா: எட்டு விமானங்கள் புறப்பாடு!

கத்தார் (13 மே 2020): சர்வதேச அளவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப இந்தியா உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான திட்டத்தை, வந்தே பாரத் மிஷன் (#VandeBharatMission) என்ற பெயரில் மத்திய அரசு வகுத்துள்ளது. கத்தாரிலிருந்து இந்தியா செல்ல விரும்புவோர், இந்தியத் தூதரகத்திற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய, தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவு…

மேலும்...

ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா…

மேலும்...

தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது. தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை,…

மேலும்...