முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

ஆயுதங்கள் வைத்திருக்கும் இந்து தெய்வங்கள் மீது வழக்கு பதியட்டும் -இந்துமத தலைவரின் சர்ச்சை பேச்சு!

பெங்களூரு (13 ஜன 2023): இந்துக்கள் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமல்ல என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். இந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இந்து வீடுகளிலும் ஆயுதங்கள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கலபுர்கியில் நேற்று நடைபெற்ற இந்து சமயத் தலைவர்கள் கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரமோத் முத்தாலிக் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகளை…

மேலும்...

ராமநவமி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களுக்கிடையே முஸ்லிம்கள் செய்த அந்த நல்ல காரியம்!

லக்னோ (12 ஏப் 2022): உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்கள் இடப்பட்ட போதிலும், கோசமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் பழச்சாறு பரிமாறியுள்ளனர். வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, அதன் ஒரு பகுதியாக, வாள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டுள்ளனர். ஊர்வலத்தின் பின்னணியில் உரத்த குரலில் கேட்கப்பட்ட பாடல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதாகவும்,…

மேலும்...

முஸ்லிம்களுக்கு மசூதி எழுப்பும் இந்துக்களும், சீக்கியர்களும் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

மோகா (16 ஜூன் 2021): பஞ்சாபில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்து முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அடிக்கல் நாட்டினர். பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றிணைந்து அங்கு வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்காக மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். ஞாயிற்றுக்கிழமை காலை இதற்காக நடந்த நிகழ்ச்சியில் அணைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முஸ்லிம்கள் நினைத்தனர். ஆனால் இந்துக்களும்,சீக்கியர்களும் குருத்வாராவின் வாயில்களைத் திறந்து…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் இந்துக்களுக்கு உதவிய போலீஸ் – ஆதாரத்துடன் நிரூபனம்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இந்துக்களுக்கு போலீசாரே உதவியது வீடியோ ஆதாரத்துடன் நியூயார்க் டைம்ஸ் நிரூபித்துள்ளது. டெல்லி கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி இனப்படுகொலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த இனப்படுகொஅலியின்போது காவல்துறையும் டெல்லி நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் பலராலும் கண்டிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது….

மேலும்...

எரிக்கப்பட்ட மசூதியை காப்பற்ற முயன்ற இந்துக்கள் – மசூதி இமாம் தகவல்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி அசோக் நகரில் உள்ள மசூதிக்கு இந்துத்துவ வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தியபோது அவர்களிடமிருந்து மசூதியைக் காப்பாற்ற அப்பகுதியின் இந்துக்கள் போராடியதாக மசூதி இமாம் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ வன்முறையாளர்கள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறையின்போது டெல்லி அசோக் நகர் மசூதி…

மேலும்...

சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – இம்ரான் கான் எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் (27 பிப் 2020): பாகிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதி வழி போராட்டத்திற்கு எதிராக இந்துத்வாவினர் வன்முறையில் ஈடுபட்டதால் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ட்விட்டரில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் வசிக்கும்…

மேலும்...

அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...

தொண்டர்கள் மத்தியில் விஜய்காந்த் உருக்கமான பேச்சு!

தமக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமது முதல் கடவுள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பிறகு மேடையில் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில்…

மேலும்...