அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும்,…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

எம்.எல்.ஏ.க்களை வாங்க ரூ.800 கோடி ஒதுக்கிய பாஜக- முதல்வர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஆக 2022): டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக 800கோடி ஒத்துக்கியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது. இதனால் டெல்லி…

மேலும்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு என்ன சொல்கிறது?

புதுடெல்லி (09 ஜூன் 2020): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறப்பட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து…

மேலும்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

புதுடெல்லி (08 ஜூன் 2020): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளர். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும்…

மேலும்...

என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை….

மேலும்...

கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று கொண்ட டில்லி…

மேலும்...

மருத்துவம் கல்வி இலவசம் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லியில் சாதி, மத பேதமின்றி கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்வேன் என்று டெல்லி முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம்…

மேலும்...

இன்றைய கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் சீஃப் கெஸ்ட் இவங்கதான்!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முக்கிய பிரமுகராக இணையத்தை கலக்கிய பேபிமப்ளர் மேனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. டெல்லியில் பல கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து கெஜ்ரிவால், மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 70 தொகுதிகளில் 62ஐ கைபற்றி சாதனை படைத்தார். பாஜகவின் மக்கள் விரோத பிரச்சாரம் டெல்லியில் பலிக்கவில்லை. காங்கிரஸ் அனைத்து இடங்களையும் இழந்தது. மக்கள் முதல்வர் என்று அழைக்கப் பட்ட கெஜ்ரிவால் அதற்கேற்ற வகையில்…

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...