இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 30 என்ற கணக்கில் இருந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும்…

மேலும்...

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் – அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமையான இன்று இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து டார்கெட் செய்யும் கொரோனா – 15 பேருக்கு பாஸிட்டிவ்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 15 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 3000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது….

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலி!

வாஷிங்டன் (03 மார்ச் 2020): அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி…

மேலும்...

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

வாஷிங்டன் (01 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஈரானையும் இந்த வைரஸ் அதிக…

மேலும்...

கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைராஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிப்பு!

தோஹா (29 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் நாடு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிலிருந்து வந்த 36 வயது கத்தார் நாட்டை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 43 பேர் கொரோனஆ நோயால் பலியாகியுள்ளனர். மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

பீஜிங் (19 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின்…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பு – ஒருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொலை!

பியாங்யாங் (14 பிப் 2020): வட கொரியாவில் கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அதிகாரிகள் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில்…

மேலும்...