இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம்!

புதுடெல்லி (28 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்…

மேலும்...

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ் – ரசிகர்கள் கவலை!

மும்பை (27 மார்ச் 2021): கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு…

மேலும்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (26 மார்ச் 2021): இந்தியாவில் கட்டுக்குள் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. , மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (24 மார்ச் 2021) இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...

ஏற்கனவே கொரோனா பாதித்த அமைச்சருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

மும்பை (24 மார்ச் 2021): ஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30,535 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக…

மேலும்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

சென்னை (23 மார்ச் 2021): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (மார்ச்.,22) 1385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.47 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா…

மேலும்...

ஒரே நிறுவனத்தில் 40 பேரை துவம்சம் செய்யும் கொரோனா!

சென்னை (22 மார்ச் 2021): சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நபர்களில் 2 பேருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 40…

மேலும்...

கொரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சென்னை (22 மார்ச் 2021): கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. , தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது….

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (22 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 212 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் மீண்டும் பரவி வருகிறது. இன்று புதிதாக 46,951 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,46,081 ஆக உயர்ந்தது. புதிதாக 212 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர்….

மேலும்...

தஞ்சையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

தஞ்சாவூர் (21 மார்ச் 2021): தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது…

மேலும்...