பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உத்திர பிரதேசத்தில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ்!

புதுடெல்லி (27 டிச 2022): 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் தலைமையை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ராவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத்திற்கு SP மற்றும் BSP இரண்டும் அழைக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி, ஆர்.எல்.டி. காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் பலர் ஜோடோ யாத்திரைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாரத் ஜோடோ யாத்ரா மூலம் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே இதன்…

மேலும்...

பள்ளியில் அல்லாமா இக்பால் பாடல் ஒலிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

லக்னோ (23 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அல்லாமா இக்பால் கவிதை வாசிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா மீது”மத உணர்வுகளை புண்படுத்தியதாக” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, காலை மாணவர்கள் ஒன்று கூடியபோது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் “லேப் பே ஆத்தி ஹை துவா” கவிதையை வாசிக்கும் வீடியோ வைரலானது. பள்ளி முதல்வர் நஹித் சித்திக்கையும் இடைநீக்கம் செய்த கல்வித்துறை, சிக்ஷா மித்ரா வசீருதீன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது….

மேலும்...

தாஜ்மஹாலுக்கு உத்திர பிரதேச அரசு நோட்டீஸ்!

ஆக்ரா (20 டிச 2022): 370 ஆண்டு கால தாஜ்மஹால் வரலாற்றில் முதன்முறையாக கேணி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு நோட்டீஸ் வந்துள்ளது. பல்வேறு பில்களை செலுத்தாததால், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறு என்றும், விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உ.பி…

மேலும்...

நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்” என்ற புத்தகத்தைப் பற்றி பேசினார். அப்போது, “சிறையில் என்னை நிர்வாணமாக்கி, பெல்ட் மற்றும் லத்தி தடி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன். மூன்று முதல் நான்கு நாட்கள் காவலில் இருந்தும், போலீசார் உணவு வழங்கவில்லை. வெளியில் சிக்கன், இட்லி தோசை, கேக்…

மேலும்...

மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

கல்லறைக்கு அனுப்படுவீர்கள் – வீடுகளை இடிப்போம் – காவல்துறை அதிகாரியின் துவேஷ பேச்சு!

லக்னோ (13 அக் 2022): உத்திர பிரதேசத்தில் துர்கா பூஜைக்கு தடையாக இருப்பவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி துவேஷத்துடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காடந்த 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பல்திராயா பகுதியில் நடந்த துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, ஊர்வலம் ஒரு மசூதியை நெருங்கியபோது, ஊர்வலத்தில் ஒழிக்கப்பட்ட பாடல் ​​உரத்த குரலில் பாடியதால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்…

மேலும்...

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!

கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை. இந்த…

மேலும்...

இந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக செய்த செலவு 344 கோடி!

புதுடெல்லி (22 செப் 2022) : இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்காக பாஜக ரூ.344.27 கோடி செலவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ரூ.218.26 கோடி செலவிட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவாகியுள்ளது. விர்ச்சுவல் பிரச்சாரத்திற்கு மட்டும் சுமார் 12 கோடி…

மேலும்...

உருது மொழியில் பெயர் பலகைக்கு எதிர்ப்பு? – உத்தரவிட்ட முஸ்லிம் அதிகாரி நீக்கம்!

லக்னோ (15 செப் 2022): உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் உருது மொழியில் பெயர் பலகைகள் பொருத்த உத்தரவிட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர். தபசும் கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி பிறப்பித்த உத்தரவில், அரசு மருத்துவமனைகளில் சைன்போர்டுகள் மற்றும் பெயர்ப் பலகைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் உருது மொழியில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு சிஎம்ஓக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது இருந்தாலும்,…

மேலும்...

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசி (12 செப் 2022): வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

மேலும்...