இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (27 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர். மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும் பலியானவர்களில் அடங்கும். 66 பேர் குணமடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply