கொரோனா வைரஸ் – கேரளாவில் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

திருவனந்தபுரம் (09 மார்ச் 2020): கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய ஒரே குடும்பத்தினருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அதே விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இது இப்படியிருக்க பத்தனம்திட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 1116 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அறிகுறிகளுடன் 85 பேர் ஒரே நாளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply