நாளை முதல் இரவு நேர ஊரடங்கு- புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் இரவு நேர முழு ஊ ரடங்கிற்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள்,…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது!

ஓசூர் (05 ஜன 2022): பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ்…

மேலும்...

சட்டப்பேரவையில் அதிமுக விசிக வெளிநடப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக விசிக வெளிநடப்பு செய்தது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. தன் உரையை தொடங்கிய ஆளுநர், கொரோனா இரண்டாவது அலையை சமாளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார். மேலும், ”மெகா முகாம்கள்…

மேலும்...

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக லடாக்கில் பாலம் கட்டும் சீனா!

லடாக் (04 ஜன 2022): லடாக்கில் அத்து மீறும் சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் மீது பாலம் கட்டும் செயற்கைக்கோள் காட்சி. புவி-உளவுத்துறை நிபுணரான டேமியன் சைமன் மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி பாங்கோங் ஏரியின் இருபுறங்களையும் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பாலம் அங்கு கட்டப்படுவதால், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை நடந்தால், அதிவேகப் படைகளையும், ஆயுதங்களையும் குவிக்க…

மேலும்...

பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? : கனிமொழி பொளேர் கேள்வி!

சென்னை (04 ஜன 2022): பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”தற்போது, ​​மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்; ஆனால் நாட்டில் பெண்களைப் பாதிக்கும் மசோதாவை ஆய்வு செய்யும் குழுவிற்கு அரசாங்கம் 30 ஆண்களையும் ஒரு…

மேலும்...

திண்டுக்கல்லில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி!

திண்டுக்கல் (03 ஜன 2022): திண்டுக்கல்லில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.‌…

மேலும்...

யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

சென்னை (03 ஜன 2022): யூ டியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனத்தின் பெண் ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் குணமடைந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளில்…

மேலும்...

கோவை தனியர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் – 5 பேர் மீது வழக்கு பதிவு!

கோவை (01 ஜன 2022): கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம்,…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மேலும்...

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை!

சென்னை (30 டிச 2021): மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக சிறப்பு சோதனை இம்மாதம் 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த சோதனையில் 2,000 கிலோ கஞ்சா மற்றும் 21 கிலோ ஹெராயின் என மொத்தமாக 23 கோடி…

மேலும்...