பாஜகவால் காலூன்ற முடியாது – ராகுலுக்கு அண்ணாமலை பதில்!

சென்னை (03 பிப் 2022): தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்று ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

மேலும்...

அதிமுக, பாஜக கூட்டணி முறிவு – தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

சென்னை (31 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும், அவர்…

மேலும்...

இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு – ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக!

சென்னை (30 ஜன 2022): இது தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று முரசொலி தமிழக ஆளுநருக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “ நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை”…

மேலும்...

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை – தேர்தல் ஆணையம் நிராகரிப்பு!

சென்னை (29 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை நடத்தியது. சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

சென்னை (29 ஜன 2022): சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியது தொடர்பாக , சென்னை திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கே.பி.சங்கர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த மனுவில்,…

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலக பாஜக முடிவு?

சென்னை (29 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கேட்கும் இடங்கள் கிடைக்காத நிலையில் பாஜக தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். பிப்ரவரி 7ஆம்…

மேலும்...

ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம்…

மேலும்...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார்!

சென்னை (27 ஜன 2022): சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த…

மேலும்...

ஒன்றிய அரசு நிராகரித்த ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு!

சென்னை (26 ஜன 2022): 73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லி அணிவகுப்பிற்கு உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார்,…

மேலும்...

அதிமுக பாஜக இடையே பிளவு – பாஜக மீது பாய்ந்த அதிமுகவினர்!

சென்னை (26 ஜன 2022): அதிமுகவிற்கு ஆண்மை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சட்டசபை தலைவரும், திருநெல்வேலி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

மேலும்...