இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை!

மும்பை (14 பிப் 2023): மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனிடையே 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய வன்முறை தொடர்பாக பிரதமர்…

மேலும்...

திருமண விருந்தில் கறி கிடைக்காததால் ரணகளமான திருமண நிகழ்ச்சி – வீடியோ!

பாக்பத் (14 பிப் 2023): கல்யாண வீட்டில் எப்போது எதற்காக சண்டை வரும் என்று சொல்ல முடியாது. பப்படம் தீர்ந்து போவது, கோழியின் லெக் பீஸ் கிடைக்கவில்லை என பிரச்சனை செய்வது, பிடித்தமான பாடல் ஒலிக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளால் சண்டைகள் வரும். இப்படித்தான் உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு சின்ன காரணத்தால் கல்யாண வீடு ரணகளமாகியுள்ளது. திருமண பந்தலில் திருமண விருந்து பரிமாறப்பட்டபோது மணமகன் மாமாவுக்கு கறி கிடைக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம். தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த சம்பவம் மூன்று…

மேலும்...

இன்றும் சரிவை சந்தித்த அதானி நிறுவன பங்குகள்!

மும்பை (13 பிப் 2023): சமீபத்தில் உலகின் டாப் 20 பில்லியனர்கள் பட்டியலில் ஒரு இடத்தை இழந்த கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து இரத்தம் வருவதால், இன்று அவரது நிகர மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு தொடங்கப்பட்ட விற்பனைகள் கௌதம் அதானியின் நிகர மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது….

மேலும்...

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…

மேலும்...

நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் – எம்.பி, ரஹீம் பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (12 பிப் 2023): ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் உறுப்பினராக இருந்தவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சையது அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சையது அப்துல் நசீர் ஜனவரி 4ம் தேதி ஓய்வு பெற்றார். இன்றோடு ஆறு வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இன்று அவர் ஆந்திர மாநில…

மேலும்...

ஹஜ் 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 10

புதுடெல்லி (12 பிப் 2023): ஹஜ் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆவணங்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பிப்ரவரி 10, 2023 முதல் தொடங்கியது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை hajcommittee.gov.in/haf23 என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 6 ஆம் தேதி சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை அறிவித்தது, அதன் கீழ் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் ஒரு யாத்ரீகரின்…

மேலும்...

நாடாளுமன்றத்தை அதிர வைத்த மஹுவா மொய்த்ராவின் உரை – பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு!

புதுடெல்லி (11 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரையை பிரபல பாலிவுட் நடிகை மீரா சோப்ரா பாராட்டியுள்ளார். அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் மஹுவா மொய்த்ராவின் பேச்சு தேசிய கவனத்தை ஈர்த்தது. மஹுவாவின் பேச்சு, “நான் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுகிறேன். துரதிஷ்டவசமாக அது மாண்புமிகு பிரதமர் அல்ல. A இல் ஆரம்பித்து I இல் முடிபவர் ஒருவர். அது அத்வானி அல்ல. அவரது…

மேலும்...

நான் உங்கள் குடும்ப உறுப்பினர் – போரா முஸ்லிம்களிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மும்பை (10 பிப் 2023): ஷியா முஸ்லிம்களின் தாவூதி போரா பிரிவினரின் புதிய அகாடமியை பிரதமர் திறந்து வைத்து அவர்களை பாராட்டினார். அப்போது உரையாற்றிய மோடி, நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக வந்தேன் என்று கூறினார். மும்பை மரோலில் அல் ஜாமியத்துஸ் சைஃபி (சைஃபி அகாடமி)யை மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி “நீங்கள் என்னை மரியாதைக்குரிய பிரதமர் என்று அழைக்கிறீர்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். நான் இங்கு…

மேலும்...

பசுவை கட்டிபிடித்தல் – விலங்குகள் நல வாரியம் திடீர் பல்டி!

புதுடெல்லி (10 பிப் 2023): காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடும் அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம், கடந்த 6-ம் தேதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும்…

மேலும்...