சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ விசாரணையின் போது அதிகமான கேள்விகளுக்கு "தெரியாது, நினைவில்லை" என்று கூறி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் இவ்வழக்கை குஜராத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற சிபிஐ விரும்புவதாக செய்தி தகவல்கள் கசிந்துள்ளன.இவ்வழக்கின் தற்போதைய நிலையைப் பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த சிபிஐ, பாரபட்சமற்ற முறையில் வழக்கு நடைபெற வேண்டுமானால் வழக்கை குஜராத் அல்லாத வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் சாட்சியான துள்சிராம் பிரஜாபதியின் என்கவுண்டர் பற்றியும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



